Saturday, June 1, 2019

அம்பலம் விஜயநாதன்

கண்ணீர் அஞ்சலி
 அமரர் அம்பலம் விஜயநாதன்
 (B.A,Dip in Edu,SLPS 1.ஓய்வுபெற்ற அதிபர்)

   அமரர் அம்பலம் விஜயநாதன்அவர்கள்அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனத்தின் ஆலோசகர்களில் ஒருவராக இருந்து நிறுவனத்திற்கு நல்ல ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார். அண்மையில் அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள் நூல் வெளியீட்டின்போது அமரர் அவர்கள் தன்னிடம் இருந்த கவிஞரின் சில பிரசுரங்களைத் தந்துதவியிருந்தார். அத்தோடு கவிஞர் பற்றிய பல தகவல்களைத் தந்ததிருந்ததும் எமக்குப் பேருதவியாக இருந்தது. 
 நாங்களும் எங்கள் நிறுவனத்திற்கு ஆலோசகர் ஒருவரை இழந்து தவிக்கின்றோம்.அன்னாரின் இழப்பானது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது எங்களுக்கும் பேரிழப்பாகும். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல ஆலடி ஐங்கரனைப் பிரார்த்திக்கின்றோம். 

- அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனம்